படையப்பா எழுந்து வா; பாட்ஷாபோல் நடந்து வா – வைரமுத்து ட்வீட்!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்களும் தற்பொழுது ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப விரும்புவதாக உணர்வுபூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினி அவர்களின் நலன் குறித்து கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கை தகவல் கேட்டு நிம்மதியை மீட்டெடுத்தேன். உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா, வாழ்த்துகிறேன் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வாபடையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வாவாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSO
— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025
பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!
March 25, 2025