4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

Published by
Ragi

கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் ஒரு அந்தலாஜி வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் தளத்திக்ற்காக இயக்கி வந்தனர் .

இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் “லவ் பண்ணா உட்ரணும்” என்ற பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி கோச்லின் நடித்துள்ளனர்.தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அஞ்சலி மற்றும் கல்கிக்கு நன்றியை தெரிவித்ததுடன் பாவக்கதைகள் தொடரின் டிரைலரை டிசம்பர் 3-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் , படத்தினை நெட்ஃபிளிக்ஸில் 18-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார் .

மேலும் இந்த வெப் சீரிஸில் வெற்றிமாறன் இயக்கும் பகுதிக்கு “ஓர் இரவு” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர் .அதே போன்று சுதா கொங்கரா இயக்கும் பகுதிக்கு “தங்கம்” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பவானி ஸ்ரீ,சாந்தனு , காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர் .மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் பிரிவுக்கு “வான்மகன்”என்று பெயரிடப்பட்டுள்ளது‌.அதில் சிம்ரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர்.இந்த வெப் சீரிஸ் வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

1 hour ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

4 hours ago