ஆஸ்கர் விருது விழா.! 4- வது முறையாக ஒத்தி வைப்பு.!

Default Image

ஆஸ்கர் விருது வழங்கும் விழா 4- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

உலக சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 93 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகின்ற 2021 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 1981 -ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம், 1938-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம், 1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட  ஆகிய சம்பவங்களால்  மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்ட து.

தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk