முடியின் அழகை பராமரிக்க உதவும் ஆரஞ்சு …, பயன்படுத்தும் முறை அறியலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்  காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆரஞ்சு எண்ணெய்

ஆரஞ்சு பழங்கள் இரண்டை எடுத்து அதனை நன்றாக பிழிந்துவிட்டு அதன் தோலை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தோலை அரைத்து தூள் செய்து கொள்ளவும். அதன் பின்பு ஆரஞ்சு தோலுடன் ஆரஞ்சு பழத்தின் சாறு பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதில் ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இவை மூன்றையும் நன்றாக கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த கலவையை வெளியில் காய வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக இந்த எண்ணையை எடுத்து நமது தலையில் எண்ணெய் போல பயன்படுத்தலாம். இது உங்கள் முடியை நல்ல பளபளப்பாக வைத்திருக்க உதவுவதுடன்,  வேர்ப்பகுதிக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

ஆரஞ்சு ஹேர் பேக்

ஆரஞ்சு பழத்தை வைத்து முடிக்கு ஹேர் பேக் செய்து உபயோகிப்பதால் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. ஆரஞ்சுப் பழத் தோலை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் முட்டை மற்றும் ஆப்பிள் அல்லது அவகேடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு இதை முடியில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை கழுவினால் மென்மையான பளபளப்பான முடி கிடைக்கும்.

ஆரஞ்சு முடி கண்டிஷனர்

ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் இவை இரண்டையும் நன்கு கலந்து தலைக்கு குளிக்கும் பொழுது, ஷாம்பு வைப்பதற்கு முன் இதனை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி பளபளப்பாக இருக்கும்.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

58 minutes ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

1 hour ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

4 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

4 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

5 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

6 hours ago