நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு ! பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு

Default Image

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில்   விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில்  தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை  தேதி  நீதிமன்றம் வழங்கியது.பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு  விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் தான் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்