திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள் ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள் பெற்றோர்கள் ஆசான்களாகுங்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, நவ.1-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 1-8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாவிலை தோரணம், வாழைமரங்களை கட்டி பல்வேறு வகையான அலங்கரிப்புகளுடன் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள் ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள் பெற்றோர்கள் ஆசான்களாகுங்கள் ஆணிகள் அறையாதீர்கள், முற்றாத மூளைகளில் அறிவு பின்பு; அன்பு முன்பு இடைவெளியின் வெற்றிடத்தை இதயத்தால் நிரப்புங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…