ஒரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். மேலும் அவரவர் சொந்த வேலைகளை பார்க்க முடியாதளவு கூட ஏற்படும். அந்த வகையில் ஒரு நாட்டில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றார். அந்நாட்டில் உள்ள பல கட்சி கூட்டணி ஆட்சியில் பிரதமராகியுள்ள இவர், தற்போது உலகின் மிக இளம் வயது பெண் தலைவர் என கூறப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை பற்றி கூறும்போது, வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும். மற்றும் பொழுதுபோக்கு, கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும், என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். பின்லாந்தில் நடைபெற்று வந்த தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து வேலை நாட்களைக் குறைக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். சம்பள உயர்வு, மேம்பட்ட பணி முதலியவற்றுக்கு உத்தரவாதம் அளித்ததால் பல மாதங்களாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
20-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் கருத்தில்கொண்டு படிப்படியாக வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் 8 மணிநேர வேலையும் பரவலானது. பின்னர் வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வீதம் ஐந்து நாட்கள் வேலை என்பதே பொதுவான நடைமுறையில் இருந்தது என குறிப்பிடப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…