கோடியில் ஒருவன் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, ” கோடியில் ஒருவன் படம் கண்டிப்பாக நல்லா இருக்கும்… குடும்பத்துடன் போய் பாருங்க.. ரொம்ப நாளுக்கு பிறகு எனது படம் வெளியாகிறது.. எனது ரசிகர்கள், என்னை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள்.. ஒரு முறை பாருங்கள் கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள், டிரைலர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…