கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று காலை தெற்கு கிரேக்க தீவான கிரீட் தீவில் 5.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 9:17 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் தென்கிழக்கில் 246 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி உள்ளனர். இதன் பின்னர் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், த்ராப்சானோ கிராமத்திற்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் அளித்துள்ளது.
இதன் பின்னர் கிரேக்க அதிகாரிகளின் அறிக்கை படி, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தீவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள பழைய கல் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…