ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 62,29,89,134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மட்டும் நேற்று 28.62 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கர்நாடகா 10.79 லட்சம், மகாராஷ்டிரா 9.84 லட்சம், ஹரியானா 6 லட்சம் மற்றும் மேற்கு வங்கம் 5.47 லட்சம் என நான்கு மாநிலங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பீகார் (4.98 லட்சம்), குஜராத் 4.89 லட்சம், கேரளா 4.84 லட்சம் மற்றும் ராஜஸ்தான் (4.59 லட்சம்) நான்கு மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளும், தமிழ்நாடு 3.73 லட்சம், ஆந்திரா 3.24 லட்சம், ஒடிசா 2.67 லட்சம் மற்றும் அசாம் 2.5 லட்சம் என மூன்று மாநிலங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 62.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில், 49.08 கோடி முதல் டோஸ், 14.08 கோடி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி, இந்த மகத்தான மைல்கல்லை எட்டிய இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். அரசு, ஆர் & டி நிர்வாகம், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் கூட்டு முயற்சிகள் காரணமாக இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…