ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 62,29,89,134 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் நேற்று 28.62 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கர்நாடகா 10.79 லட்சம், மகாராஷ்டிரா 9.84 லட்சம், ஹரியானா 6 லட்சம் மற்றும் மேற்கு வங்கம் 5.47 லட்சம் என நான்கு மாநிலங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பீகார் (4.98 லட்சம்), குஜராத் 4.89 லட்சம், கேரளா 4.84 லட்சம் மற்றும் ராஜஸ்தான் (4.59 லட்சம்) நான்கு மாநிலங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளும், தமிழ்நாடு 3.73 லட்சம், ஆந்திரா 3.24 லட்சம், ஒடிசா 2.67 லட்சம் மற்றும் அசாம் 2.5 லட்சம் என மூன்று மாநிலங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 62.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ள நிலையில், 49.08 கோடி முதல் டோஸ், 14.08 கோடி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி, இந்த மகத்தான மைல்கல்லை எட்டிய இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். அரசு, ஆர் & டி நிர்வாகம், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் கூட்டு முயற்சிகள் காரணமாக இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

42 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

48 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago