தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம் – சீன அதிபர் ஜீ ஜின்பிங்

Published by
லீனா

தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன்,  அதனை உலகின் பொது சொத்தாக்குவோம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, இன்று லட்சக்கணக்கான மக்களை தாக்கி உள்ளது. இந்த வைரஸானது முதலில் சீனாவின் வுஹாண் மாகாணத்தில் தான் உருவானது. இந்த வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிற நிலையில்,  சீனாவின் உணவு பழக்கமும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்றும், இந்த வைரஸானது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த குற்றங்களை நிரூபிக்கும் வண்ணம் அதிகார பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், அமெரிக்கா இந்த விஷயத்தில் சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக தற்போது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான். 

இந்த கொரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை, 4,891,330 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 320,134 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், காணொலி காட்சி மூலம், உலக சுகாதார சபை கூட்டத்தில் பேசிய ஜீ ஜின்பிங் கொரோனா பிரச்சனையானது முற்றிலுமாக முடிந்த பிறகு, அது தொடர்பாக உலகளாவிய விரிவான மதிப்பீட்டிற்கு, சீனா முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் கூறுகையில், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அந்த தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன்,  அதனை உலகின் பொது சொத்தாக்குவோம் என்றும், இதன் மூலம் வளரும் நாடுகளில் எளிமையாகவும், மலிவாகவும் கிடைப்பதற்கான சீனாவின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Published by
லீனா

Recent Posts

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

1 minute ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

30 minutes ago

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

11 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

12 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

12 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

13 hours ago