ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வகை தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், சந்தேகம் எதுவும் வேண்டாம். ஓமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
எனவே நாட்டில் ஐந்தாம் கட்ட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1898 பேருக்கு ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. பிரிட்டனில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
டெல்டா வைரஸை விட ஓமைக்ரான் வேகமாக பரவுகிறது. எனவே மூன்றாவது டோஸ் போடுவது தொடர்பாக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…