இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலில் 79 மணிநேரம் மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இலங்கை பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் எனும் எண்ணெய் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுடன் வந்துள்ளது. அதில் 23 பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்க நாட்டை சேர்ந்த ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த கப்பலின் எஞ்சின் அறையில் கொதிகலன் வெடித்ததால் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவும் இந்த பணியில் இணைந்துள்ளது. அதன்படி இந்தியாவின் கடலோர காவல் படையை சேர்ந்த 5 கப்பல்கள் ஒரு கடற்படை கப்பல் மற்றும் இரண்டு டோர்னியர் விமானங்கள் என பெரும்படை சேர்ந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. 79 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு பணிகளின் போது சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களும் இருந்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…