ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வோரு காட்சியையும் நான் ரசித்தேன், அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.அஷ்வத் சிறப்பாக எழுதி டைரக்ட் செய்துள்ளதாகவும், அஸ்வினின் நடிப்பு எளிமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு இயக்குநர் அஷ்வத், அஸ்வின், ரித்திகாசிங், வாணிபோஜன் ஆகியோர் நன்றியை தெரிவித்துள்ளனர். நான் இந்த பதிவை பார்த்து விட்டு குத்தாட்டம் போடுவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…