ஓ மை கடவுளே படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்த சூப்பர் ஸ்டார்.! மகிழ்ச்சியில் OMK டீம்ஸ்.!

Default Image

ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வோரு காட்சியையும் நான் ரசித்தேன், அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.அஷ்வத் சிறப்பாக எழுதி டைரக்ட் செய்துள்ளதாகவும், அஸ்வினின் நடிப்பு எளிமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு இயக்குநர் அஷ்வத், அஸ்வின், ரித்திகாசிங், வாணிபோஜன் ஆகியோர் நன்றியை தெரிவித்துள்ளனர். நான் இந்த பதிவை பார்த்து விட்டு குத்தாட்டம் போடுவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்