சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதற்கான இறுதி கட்ட சோதனைக்கு விரைந்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. உலக நாடுகளை தொடர்ந்து, கொரோனா வைரஸை பரப்பிய சீனாவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தநிலையில், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவது இல்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் ஒருவர், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறித்தி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரேசில் அதிபர், “நிச்சயமாக, சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…