ஒடிசாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், சுட்டு கொல்லப்பட்டதையடுத்து புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து ஒடிசாவில் நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவரது நியமனம் முதல்வர் அலுவலகத்தில் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லாலின் ஒப்புதலுடன், முதல்வர் நவீன் பட்நாயக், நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையை ஒதுக்கினார். நாடாளுமன்றத்தின் விவகாரத்துறையின் பொறுப்புகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நபா தாஸ் மரணம் :
ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சில் கலந்துகொள்ள நபா தாஸ் தனது காரில் இருந்து இறங்கிய போது போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் அவரது மார்பில் சுட்டுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் மரணமடைந்தார். ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மறைந்த அமைச்சர் நபா கிஷோர் தாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…