104ஐ அழுத்துங்கள்-துணைமுதல்வர் அழைப்பு!

Default Image

உலகளவில் கொரோனா தொற்று 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்களில் பலர் மன உளைச்சல், அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக தற்கொலை உயிரிழப்புகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் இது குறித்து துணைமுதல்வர் பன்னீர் செல்வம்  கூறியுள்ளதாவது: கொரோனா அச்சமோ, மனஅழுத்தமோ இருந்தால் அரசு உதவி எண் 104-ஐ அழைக்கவும். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள்  உங்களது மனஅழுத்தத்தை போக்க உதவுவார்கள் என்று தெரிவித்துள்ள  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நெல்லை ‘இருட்டுக் கடை’ உரிமையாளர் ஹரிசிங் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும்  சமீப காலத்தில் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்வது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்