போர்ச்சுக்கல் நாட்டில் பயோன்டெக் – ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட செவிலியர் உயிரிழந்தார்.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கொரோனா தடுப்பு மருந்தான ஃபைசர், 95 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படுவதால், ஃபைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து, பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்பொழுது போர்ச்சுக்கல் நாட்டில் பயோன்டெக் – ஃபைசர் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற 41 வயது செவிலியர், இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாட்களில் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…