கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக வீடியோக்களை அனுப்பியிருந்தார். இந்த செயலி கைதிகளுடன் குடும்பங்களை இணைக்க உதவுகிறது. சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் “நான் உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன், நீ இறக்கப் போகிறாய்” என கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.
இந்த வழக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் தொடர்புடையது என்பதால் இந்த வழக்கை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…