கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக வீடியோக்களை அனுப்பியிருந்தார். இந்த செயலி கைதிகளுடன் குடும்பங்களை இணைக்க உதவுகிறது. சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் “நான் உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன், நீ இறக்கப் போகிறாய்” என கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து சிறையில் உள்ள தனது கணவருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்.
இந்த வழக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் தொடர்புடையது என்பதால் இந்த வழக்கை புலனாய்வு அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…