சபரிமலைக்கு வருவோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பக்தர்களுக்கு வாடகை பைக் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையை கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் முதல் சபரிமலை பம்பா ஆறு வரை பைக்கில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, வாடகை பைக் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை மூல, ஒருநாள் முழுவதும் பைக்கை பயன்படுத்த விரும்புவோருக்கு ரூ. 1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பைக்குகளை பெறுவோர் 200 கி.மீ மேல் செல்லக்கூடாது. அதனை மீறினால், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ. 6 கட்டணமாக வசூலிக்கப்பட்டும். மேலும் ஒருநாளுக்கு மேல் ஒரு மணிநேரம் கடந்தால் கூட, பைக் வாடகை பெற்றவர்கள் ரூ. 100 கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட்ட திருவனந்தபுரம் ரயில்வே பிரிவு முதன்மை அதிகாரி பாலமுரளி, கொச்சி காஃபிரைட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேலும் பல நிறுவனங்களும் வாடகைக்கு பைக்குகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, எர்ணாகுளம், ஆலப்புழா, திரிசூர், கோட்டாயம் போன்ற கேரளாவின் முதன்மையான மாவட்டங்களில் வாடகை பைக்குகள் கிடைக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…