சீமானை சீண்டுவதற்க்காக அல்ல- துக்ளக் பட சர்ச்சை குறித்து நேரில் பார்த்திபன் விளக்கம்!

Default Image

அண்மையில் வெளியாகிய துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாம் தமிழர் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தற்போது சீமானிடம் தான் நேரடியாக பேசியதாக பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசி கண்ணா,சம்யுக்தா மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்து இருக்கக்கூடிய துக்ளக் தர்பார் எனும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில் ராசிமான் எனும் பெயருடன் அரசியல்வாதியாக நடித்திருக்க கூடிய பார்த்திபனின் கட்சி போஸ்டர்களை சிலர் கிழிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த ராசிமான் என்ற பெயர் நாம் தமிழர் கட்சி தலைவராகிய சீமானை குறிப்பதாகவும் இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடிகரும் இயக்குனரும் ஆகிய பார்த்திபன் அவர்கள் சீமானை சந்தித்து நேரில் இது குறித்து பேசியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நண்பர் சீமான் அவர்களிடம் நேரடியாக துக்ளக் தர்பார் குறித்து விளக்கம் அளித்து விட்டேன் எனவும், பெருந்தன்மையாக அவரும் பதில் அளித்ததாகவும் ராசிமான் எனும் பெயர் சீண்ட வேண்டும் என்று வைக்கப்பட்டது அல்ல, அவ்வாறு இருந்திருந்தால் நானே அதற்கு இடம் தந்திருக்க மாட்டேன். ஏனென்றால் இந்நிமிடம் வரையிலும் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் அயராது உழைத்து தங்கள் இலட்சிய இலக்கை அடைய போராடக்கூடிய நாம் தமிழர் தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தர மாட்டேன் எனவும், உள் நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் எனவும் கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்