கடந்த வாரம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட போகோ ஹராம் குழு தாக்குதலில் 110-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது போகோ ஹராம் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கோர்ஷா எனும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 110 அப்பாவி பொதுமக்களும் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய அவர் 43 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்ட இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த அன்று 70க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூரமான மற்றும் புத்தி இல்லாத தாக்குதல் நீதிக்கு எதிரானது எனவும் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில் தேடி வடகிழக்கு நைஜீரியாவில் பயணம் செய்தவர்கள் சிலர் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் 8 பேர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…