வடக்கு மாசிடோனியா: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து..!

Published by
Sharmi

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

டெட்டோவோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அந்த மருத்துவமனை முழுவதும் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் தப்பிக்க வழியின்றி அலற தொடங்கியுள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து அறிவித்த பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி 1 மணி நேரம் கழித்து தீயை அணைத்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஸ்கோப்ஜேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்த காரணத்தினால் தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டது எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

5 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago