ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெட்டோவோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அந்த மருத்துவமனை முழுவதும் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் தப்பிக்க வழியின்றி அலற தொடங்கியுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து அறிவித்த பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி 1 மணி நேரம் கழித்து தீயை அணைத்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஸ்கோப்ஜேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்த காரணத்தினால் தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டது எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…