உலகின் வல்லரசு நாடுகள் பல இரு அணியாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 75 வது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி ரஷ்யா பெற்ற வெற்றிய நினைவு கூற வெற்றி தினமாக இதை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது. அதாவது, இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு தொடங்கி 1945ஆம் ஆண்டு முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் பலியாயினர். வடகொரியா மண்ணில் பலியான தங்கள் நாட்டு வீரர்களை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா உரிய விருதினை வழங்க முடிவு செய்தது. இதனையடுத்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், வடகொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் பங்கேற்று அந்த விருதினை வடகொரிய அதிபருக்கு வழங்கினார். அதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரி சாங் ஹூவான் அந்த விருதை பெற்றுக்கொண்டார்
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…