வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார்- தென் கொரியா உறுதி.!

Published by
murugan

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் , அதிபர்  கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் உலா வந்தன.

கிம் ஜாங் உன் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் நிறுவனம் தெரிவித்தது.கிம் இறந்துவிட்டதாக சமீபத்தில், ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரியாவின் அதிபர்  கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வமற்ற  செய்திகளுக்கு , அதிபர்  கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று  தென் கொரியா உறுதியாக கூறியுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன்  சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , “எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது”.  கிம் ஜாங் உன் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். ஏப்ரல் 15 -ம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைத் தவறவிட்டதால் கிம் உடல்நலம்  குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் காணப்பட்டார் என்று வட கொரிய அரசு ஊடகங்களான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 13 முதல்,  இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.

ஆனால், இந்த மாத தொடக்கத்தில் கிம் ஜாங் உன் நாட்டு மக்களை சந்திக்க சென்றபோது, நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்ததாக ஜப்பான் நாட்டு பத்திரிகைக்கு சீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்னுடன் இருந்த மருத்துவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். ஒருவேளை வட கொரியா அதிபர்  கிம் ஜாங் உன் இறந்திருந்தால், வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தால் மட்டுமே அது உண்மையான செய்தி என்று நம்மால் கருத முடியும்.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago