இனிமேல் சிம்புவின் படங்களுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது ஏற்கனவே அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரில்லா படத்தின் தயாரிப்பாளரும் அட்வான்ஸ் வாங்கி விட்டு சிம்பு படம் நடிக்காமல் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளாராம்.
ஏற்கனவே இந்த பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் இது தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பெரும் பூகம்பமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி அவர்களின் கோரிக்கையை ஏற்று சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…