கொரோனா தொற்று காரணமாக H-1B, L-1 விசாக்களுக்கான நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவிப்பு.
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “H-1B” விசா வழங்கி வருகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர்.
இந்த ‘H-1B’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “H-1B” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர்.
இதன்பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “H-1B”விசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், H-1B விசா மற்றும் (L-1, O-1) குடியுரிமைச்சாராத பிற விசாதாரர்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா பதிவாகும் நிலையில், விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மூன்றாவது ஆண்டாக நீடிப்பதால், விசா வழங்குவதை எளிதாக்க 2022-ஆம் ஆண்டில் சில பணி-விசா வகைகளுக்கான நேர்காணல் தற்காலிகமாக கைவிடுகிறது.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் H-1B, L-1 மற்றும் O-1 உள்ளிட்ட விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் நேரில் நேர்காணல் செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…