ஜூலை 19 முதல் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்றுநோய் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு மேற்கொண்ட கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு வீட்டு வசதித்துறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாட்டில் வருகின்ற ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக அகற்ற திட்டமிட்டு வருவதாகவும், அதன் பிறகு முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அந்நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றியை பெற்றுள்ளதாகவும் அதனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…