இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து உள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 6 மணி முதல் 8 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று அந்த மின் வெட்டு 10 மணி நேரம் வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது.
தட்டுப்பாடின்றி பெட்ரோல் வினியோகம். சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இன்றும், நாளையும் டீசலை பெறமுடியாது. இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…