இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாக். நாடாளுமன்றத்தில் வரும் 28ம் தேதி வாக்கெடுப்பு.
பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் மீது தாக்குதல் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இம்ரான்கான் அரசு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படம் என கூறப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற உள்ளதால், உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் இம்ரான்கானை அந்நாட்டு ராணுவம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்பட்டது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரபரப்பான சூழலில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், வரும் 28-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.
எனவே, இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்றது. பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…