கோவில் கட்டும் ரசிகர்களுக்கு… நிதி அகர்வால் கோரிக்கை..!

Published by
பால முருகன்

நடிகை நிதி அகர்வாலிற்கு கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அறிக்கை வெளியிட்டு நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். 

 தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் கடந்த பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலிற்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைந்திருப்பதால் அதற்காக பாலபிஷேகம் செய்யப்பட்டு ள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்த செய்தியை அறிந்த நிதி அகர்வால் இது குறித்து கூறுகையில் “நான் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் இது போன்ற நிகழ்வுகளால் நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தனக்கு கோவிலில் கட்ட திட்டமிட்ட ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்தது தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், என்மீது எனது ரசிகர்கள் பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டக்கூடிய விஷயம். அதே சமயம் எனக்காக கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும் உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago