நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் குத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள தெற்கு தீவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள டுனேடின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை திடீரென கத்தியால் குத்த தொடங்கியுள்ளார். இதில் 4 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கத்தி குத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 4 பேர் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் எனவும், மேலும் ஒருவரும் காயம் அடைந்து இருப்பதால் அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் பொது மக்கள் அவரை பிடித்து கட்டி வைத்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். இருப்பினும் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திக்குத்துச் சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…