நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது உலகளவில் மொத்தமாக 2,02,54,685 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,38,930 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே நியூசிலாந்து நாட்டில்,கடந்த 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.எனவே உலக சுகாதார அமைப்பும் நியூசிலாந்தை பாராட்டியது. இதனால் நியூசிலாந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அங்கு புதிதாக ஒரு குடும்பத்தைசேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…