நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது உலகளவில் மொத்தமாக 2,02,54,685 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,38,930 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே நியூசிலாந்து நாட்டில்,கடந்த 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.எனவே உலக சுகாதார அமைப்பும் நியூசிலாந்தை பாராட்டியது. இதனால் நியூசிலாந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அங்கு புதிதாக ஒரு குடும்பத்தைசேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…