சமூக விலகலை கடைபிடிக்க காலணி தயாரிப்பாளர் செய்த புதுவிதமான காலணி!

Default Image

சமூக விலகலை கடைபிடிக்க காலணி தயாரிப்பாளர் செய்த புதுவிதமான காலணி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள், இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள, மக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ருமேனியாவை சேர்ந்த காலணி தயாரிப்பாளர் கிரிகோர் லூப் என்பவர், சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நீளமான ஷூக்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்