புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும்..!

Published by
murugan

மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக சேர்ந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வாதம் செய்ததை தான் நவராத்திரி விழா என கொண்டாடுகின்றோம்.

நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் , திறமைகளையும் , ஒன்று இணைத்து நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வு கொலு வைப்பது.

சிலர் கொலு வைப்பதை பல வருடங்களாக செய்து வருவார்கள். அவர்களுக்கு தெரியும்  எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் இருக்க வேண்டும் என அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.

புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இந்த படிகள் மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது எனவும் , உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி படிப்படியாக  தோன்றியது என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.

முதல் படியில்:

மரம், செடி, கொடி போன்ற ஓரறிவு கொண்டவை வைக்க வேண்டும்.

இரண்டாம் படியில்: 

நத்தை, சங்கு போன்ற 2 அறிவு கொண்ட உயிரனங்கள்  வைக்க வேண்டும்.

மூன்றாவது படியில்:
கரையான், எறும்பு  போன்ற  3 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.

நான்காவது படியில்:
நண்டுக்கும், வண்டுக்கும் போன்ற 4 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.

ஐந்தாவது படியில்:
பறவைகள், விலங்கினங்கள் போன்ற 4 அறிவு கொண்டவை  வைக்க வேண்டும்.

ஆறாவது படியில்:
மனிதன் ,  மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.

ஏழாவது படியில்:

மனிதர்களில் உயர்ந்த மகான்களான விவேகானந்தர், வள்ளலார் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாவது படியில்:

கடவுளின் அவதாரங்களான  தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற  பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாவது படியில்:

முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago