கொரோனாவுடன் சேர்ந்து குழந்தைகளை தாக்கும் புதிய நோய் – அதிர்ச்சியில் அமெரிக்கா

Default Image

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உலக முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கே இன்னும் தடுப்பு மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த புதிய அலர்ஜி நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று ஐரோப்பிய நாடுகளிலும் கூட குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து இந்த அலர்ஜியும் தாக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூஸ் கியூமோ கூறுகையில், குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் தாக்குகிறது. இது ஒரு புதிய வகை நோய் என்றும் இதனால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது எனவும் கூறியுள்ளார். இந்த நோயால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இந்த நோய் ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள் மற்றும் 18 வயதான பெண் உள்ளிட்ட என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று, நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வகை நோய் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தாலும் சாப்பிடுவதில் சிக்கல், அடி வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சுவாசிப்பதில் சிக்கல், தோல் நிறத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்