நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற நிலையில் 3 வது முறையாக பதவி ஏற்பு !
கே.பி.சர்மா ஓலி தற்போது நேபாளின் 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார், அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமராக அறிவிக்கப்பட்டார். திங்களன்று சபை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ஓலி இழந்ததை அடுத்து வியாழக்கிழமை இரவு 9 மணிக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார், ஆனால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறிவிட்டது.
இதனையடுத்து வியாழக்கிழமை இரவு கே.பி.சர்மா ஓலி மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார், பின்னர் வெள்ளிக்கிழமை அன்று அதிபர் பித்யா தேவி பண்டாரி, ஷிலால் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில், 69 வயதான ஓலிக்கு சத்தியப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பை வழங்கினார்.எனினும்,கே.பி.சா்மா ஓலி அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற 30 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
முன்னதாக ஓலி அக்டோபர் 11, 2015 முதல் ஆகஸ்ட் 3, 2016 வரையிலும், மீண்டும் பிப்ரவரி 15, 2018 முதல் மே 13, 2021 வரையிலும் பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…