நேபாளம் விமான விபத்து: 22 பேர் மாயம்.! 14 உடல்கள் மீட்பு.!

Default Image

நேபாளத்தின் போகாராவில் இருந்து  இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் மாயமானது.

இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் பகுதியில் உள்ள சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டனர். இதில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன அடையாளம் தெரியாதபடி, உடல்கள் சீதைந்துள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

இதில் மற்றோரு பெரிய சோகம் என்னவென்றால், தனுஷாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்