நாம் சிறியதென நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் நெல்லிக்கனியின் பலன்கள் தெரிந்தால் நீங்கள் வியப்படைவது நிச்சயம். ஒரு மனிதனுக்கு நோய் வரக்காரணம் வாதம் பித்தம் கவம் மூன்று முக்கிய நாடிகள் அதன் சமநிலையை இழக்கும் போது நோய் வருகிறது. நெல்லிக்காய் அதனை தடுத்து மூன்றையும் சமநிலையில் வைத்து மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
நெல்லிக்காய் மனிதனுக்கு குளிர்ச்சியூட்டவும், மலமிளக்கியாகவும், வீரியம் தரும் மருந்தாகவும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
நெல்லிக்காயுடன் கடுக்காய் மற்றும் சாதிக்காய் சேர்த்து திரிபலசூரணம் பொடி செய்து அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்மாகும். அதிகமாக பசி உணர்வை தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். இந்த பொடி மூலம், மலச்சிக்கல் போன்ற பல நோய்களுக்கும் முக்கிய மருந்தாக பயன்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை புத்துணர்ச்சி அடையும்.
நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். அதனை செய்வதற்கு 10 பெரிய நெல்லிக்காயை எடுத்து அதனை துருவி அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை கப் சீனி, 2 ஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சம்பழ சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும். ரத்தசோகை நீங்கும். முடி வளர வழிவகை செய்யும்.
சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…