மது போதையில் ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்!

Published by
Rebekal

வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் முதற்கொண்டு தற்பொழுது வரையிலும் திரைப்படத்துறையில் பயன்படுத்தக்கூடிய ஆடியோ கருவியை வைத்து இரவு நேரத்தில் சத்தமாக ஆடியோ போட்டுவிட்டு மது அருந்திவிட்டு முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு அழைத்து ரகளை செய்வதாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணைக்காக விஷ்ணுவிஷால் குடியிருக்க கூடிய அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் வந்துள்ளனர். அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட பொழுதும் விஷ்ணு விஷால் எனது தந்தை ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் நீங்கள் வந்து என்னிடம் இவ்வாறு விசாரணை நடத்துகிறீர்களா எனவும்,  மேலும் புகார் அளித்த நபர்களுடன் வாக்குவாதத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளரும் போலீசில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago