எதிர்மறை சக்தி, தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும்..!

Published by
Sharmi

தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும்.

கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். வாழ்க்கையில் சந்தோஷங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென பல சறுக்கல்களை சந்திப்பார்கள். அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகரிக்கும். முகம் கருத்து போய் சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவார்கள். இதனால் மனம் நொந்து செய்வதறியாது தவிப்பார்கள். செய்வினை, சூனியம் போன்று யாரும் இவர்களுக்கு செய்திருந்தாலோ அல்லது ஏதாவது கழிப்புகளை தெரியாமல் இவர்கள் தாண்டியிருந்தாலோ இது போன்று நேரலாம்.

கண் திருஷ்டிகளால் அல்லல் படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு மேல் இதை செய்வது சிறந்தது. பிளாஸ்டிக் பக்கெட்டில் பாதம் மூழ்கும் வரை கால் பொறுக்கும் சூட்டில் சுடு தண்ணீர் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். அதில் 2 வெற்றிலைகளை நன்கு கிழித்து போட்டுக்கொள்ளுங்கள். மேலும் கொஞ்சம் மஞ்சள் தூள், 1 கைப்பிடி கல் உப்பு, சிறிதளவு மருதாணி இலைகள் மற்றும் காய் சேருங்கள். இவற்றை நன்கு கலந்து கொண்டு அதில் கால் பாதங்கள் முழுவதுமான மூழ்குமாறு 10 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.

அந்நேரத்தில் உக்கிர தெய்வங்களான காளி, நரசிம்மர், பிரத்தியங்கிரா தேவி, அங்காளபரமேஸ்வரி, துர்க்கையம்மன் போன்ற உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து கொள்ளலாம். அனுமனையும் நினைத்து கொள்ளலாம். நினைத்த தெய்வத்திடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். எதிர்மறை சக்திகள் உங்களை விட்டு நீங்கி விட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு 10 நிமிடம் கழித்து கால்களை வெளியே எடுத்து விட்டு தூய்மையான நீரால் கால்களை கழுவிக்கொள்ளுங்கள். அந்த பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை தொடாமல், வீட்டிற்கு வெளியே இருக்கும் மண்ணில் ஊற்றி விடலாம். இது போன்று வாரம் ஒரு முறை செய்தாலே கண் திருஷ்டி, ஏவல் போன்றவை நீங்கி விடும்.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

7 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

7 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

8 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

8 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

9 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

11 hours ago