அறிவிச்சாச்சு: NEET-JEE தேர்வு தேதி இதோ!!

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு நடத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், டிவிட்டரில் வீடியோ மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Keeping in mind the safety of students and to ensure quality education we have decided to postpone #JEE & #NEET examinations. JEE Main examination will be held between 1st-6th Sept, JEE advanced exam will be held on 27th Sept & NEET examination will be held on 13th Sept. pic.twitter.com/klTjtBxvuw
— Dr. Ramesh Pokhriyal Nishank ( Modi Ka Parivar) (@DrRPNishank) July 3, 2020
அதில் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்., 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்., 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவானது எடுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025