அமெரிக்காவில் 70,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. அச்சத்தில் அமெரிக்க மக்கள்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தீவிர தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருப்பினும் இந்த வைரசை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 3,646,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 252,407 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், உலக அளவில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
அமெரிக்காவில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் 1,212,835 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் 1,324 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 69,921 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…