பிரபல நடிகை நயன்தாரா, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நயன்தாரா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அவரிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மோதிரம் குறித்து தெரிவித்துள்ள நயன்தாரா, இது என் நிச்சயதார்த்த மோதிரம். எனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…