மலையாள நடிகையான மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவை புகழ்ந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாளாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார்.தற்போது இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. மேலும் பல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். இவரை மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் அளித்த பேட்டியில் நயன்தாரா அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நயன்தாரா பணியாற்றி வருவதை கவனித்து வருவதாகவும், அவரை போல் யாரையும் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா அவர்கள் பல நடிகைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஏனெனில் பெண்களாலும் வலிமையாக நிலைத்து நின்று சினிமா துறையில் சாதிக்க முடியும் என்பதனை நிரூபித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தனக்கு பிடிக்கும் என்றும், அவரது சொந்த வாழ்க்கையை குறித்து தனக்கு அதிகம் தெரியும் என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…