நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ..!

Published by
murugan

நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

விண்வெளியின் அற்புதமான படத்தை நீங்கள் பார்த்திருந்தால் அதற்கு  நாசாவின் ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது. சில நேரங்களில் இது விண்வெளியில் “பூமியின் கண்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது.

நம் வீடுகளில் பொதுவாக எந்த பழைய இயந்திரத்திரம் இருந்தால் அதை சரி செய்வோம். அது வேலை செய்யவில்லை என்றால், அந்த இயந்திரத்தை மாற்றுவோம். அதையே தான் தற்போது நாசாவும் செய்துள்ளது. ஹப்பிளை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது விண்வெளியின் காட்சிகளைக் காண புதிய இயந்திரத்தை உருவாகியுள்ளது.

James Webb Space இந்த புதிய தொலைநோக்கிக்கு “ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ”  என பெயரிடப்பட்டுள்ளது. பழைய ஹப்பிள் தொலைநோக்கியை விட ஜேம்ஸ் வெப்  தொலைநோக்கி அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். மைல்கள் தொலைவில் உள்ள விண்மீன்கள், சிறுகோள்கள் ஆகியவற்றைத் தேடுவதற்கு இது உதவும். ஜேம்ஸ் வெப்  தொலைநோக்கி இதுவரை விண்வெளியில் ஏவப்பட்ட மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியாக மாற உள்ளது. இதை நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது.

நாசாவின் புதிய தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் சுமார் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு, அது பிரதிபலிப்பாளராக செயல்படுகிறது. இந்த தொலைநோக்கி சுமார் 1.5 மில்லியன் கிமீ உயரத்தில் விண்வெளியில் நிறுவப்படும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றால் அது தொடர்ந்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை தனது வேலையைச் செய்யும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிப்ரவரியில் விண்வெளியின் முதல் படத்தை அனுப்பும். இந்த தொலைநோக்கி பழைய ஹப்பிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஹப்பிள் போலல்லாமல், ஒரு தவறு ஏற்படும் போது, ​​அதை பூமியில் இருந்தே சரிசெய்ய முடியும்.

ஏப்ரல் 24, 1990 அன்று நாசா சக்திவாய்ந்த ஹப்பிள் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சுமார் ஒரு மாதம் பிறகு, ஹப்பிள் மே 20, 1990 அன்று முதல் முறையாக ஒரு படத்தை அனுப்பியது. 1990-ம் ஆண்டு ஏவப்பட்ட ஹப்பிள் டெலஸ்கோப் பலமுறை பழுதுபார்க்கப்பட்டும் இன்னும் சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் நாசா இப்போது ஹப்பிளுக்குப் பதிலாக 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.73,616 கோடி) மதிப்பிலான ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை ஏவியுள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளிக்குச் செல்வதன் மூலம், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பல தசாப்தங்கள் பழமையான மர்மங்களும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள கௌரோ ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ஈசிஏ ராக்கெட் மூலம் “ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி” ஏவபட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

5 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago