கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்டன.
இதனத்தொடந்து,மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்,மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டறிவதற்காக,மத்திய அரசானது “மை கவர்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க்” என்ற வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி இந்த உதவியைப் பெற மக்கள்,+919013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Namaste’ என்று அனுப்ப வேண்டும். அதன்பின்னர்,கோவிட் வேக்சினேசன் சென்டர் உள்ளதை அறிய 1 என டைப் செய்து அனுப்ப வேண்டும்.பிறகு தங்களது மாவட்டத்தின் ஆறு இலக்க PIN code நம்பரை அனுப்ப வேண்டும்.இதனையடுத்து,மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை தெரிந்துக்கொள்ள முடியும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…