கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்டன.
இதனத்தொடந்து,மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்,மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டறிவதற்காக,மத்திய அரசானது “மை கவர்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க்” என்ற வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி இந்த உதவியைப் பெற மக்கள்,+919013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Namaste’ என்று அனுப்ப வேண்டும். அதன்பின்னர்,கோவிட் வேக்சினேசன் சென்டர் உள்ளதை அறிய 1 என டைப் செய்து அனுப்ப வேண்டும்.பிறகு தங்களது மாவட்டத்தின் ஆறு இலக்க PIN code நம்பரை அனுப்ப வேண்டும்.இதனையடுத்து,மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை தெரிந்துக்கொள்ள முடியும்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…