கமலா ஹாரிஸின் அம்மா, அவர் மற்றும் அவரின் தங்கை மாயாவிற்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக ஒரு பெண்ணைத்தான் நியமிக்கவுள்ளதாக தெரிவித்தார். அந்தவகையில், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபராக நியமிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பின் மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
நேற்று இந்தியாவின் 74 -ம் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதற்கு வாழ்த்து தெரிவித்த கமலா ஹாரிஸ், “வரலாறு மற்றும் கலாச்சாம் மட்டுமல்லாமல் இன்னும் சில விஷயங்களில் இந்தியா, அமெரிக்கா நெருக்கமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரின் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களையம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், அவரின் தாயார் ஷாயமளா, அவரின் 19 வயதில் காலிபோர்னியா வந்தடைந்ததார். அப்பொழுது அவரிடம் உடைமைகள் அவ்வளவு நிறைய இல்லை என்றாழும், அவரின் பெற்றோரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றெடுத்து கலிபோர்னியா வந்தார்.
மேலும், தான் எங்கிருந்து வந்தார் என்பதை எனக்கும், எனது சகோதரி மாயாவுக்கும் புரிய, எங்களை அடிக்கடி இந்தியா அழைத்துச் சென்று, அவரின் வம்சாவளி பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என நினைப்பார். தென்னிந்திய உணவுகள் மீது அதிகளவில் ஆர்வம் காட்டியதாகவும், அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியின் பெருமையைப் பற்றி அடிக்கடி கூறுவார் எனவும், எங்களுக்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எனது அம்மா மேற்கொண்டதாகவும், தனது தாத்தாவுடன் சென்னையில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸின் தாத்தா, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய வீரர்களை பற்றி நிறைய கூறுவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டியது நமது பொறுப்பு எனவும், நான் இந்த இடத்தில் தற்போது நிற்பதற்கு அதுபோன்ற பாடங்கள் தான் காரணம் என உருக்கமாக கமலா ஹாரிஸ் கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…