இந்த படத்தை பார்த்து நானும் என் கணவரும் கண்ணீர் விட்டு அழுதோம் – மாஸ் நாயகி ஓபன் டாக்.!

Published by
பால முருகன்

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், மாஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த பிரணிதா படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பது ‘காஷ்மீர் பண்டிட்டுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்த இதயத்தை உலுக்கும் உண்மையை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம் தி காஷ்மீர் . படத்தின் முடிவில் நானும் என் கணவரும் கண்ணீருடன் இருந்தோம்.. நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால் தயவுசெய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

13 minutes ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

38 minutes ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

1 hour ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

2 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

3 hours ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

3 hours ago